Friday, January 2, 2015

Handling boredom that arise while studying - படிப்பதில் சலிப்புத்தன்மை மற்றும் சோர்வுணர்வு ஏற்படும்பொழுது, சுறுசுறுப்பு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டிய உத்திகள்.

படிப்பதில் லிப்புத்தன்மை மற்றும் சோர்வுணர்வு ஏற்படும்பொழுது, சுறுசுறுப்பு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டிய உத்திகள்ஆர். மனோஜ் – மருத்துவ உளவியல் நிபுணர்- சென்னை
  • ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு அல்லது  அதிக பட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு மேலே ஒரே பாடத்தை தொடர்ந்து படிக்காதீர்கள். அது உங்களுக்கு சலிப்புதன்மையை ஏற்படுத்தலாம். பாடங்களை மாற்றி மாற்றி படியுங்கள். உங்கள் அட்டவணையும் அவ்வாறே இருக்கட்டும்.
  • ஒவ்வொரு அரை மணி நேர படிப்பிற்க்கு பிறகும் இளைப்பாற ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இந்த இடை வேளையின் போது கண்களை மூடிக்கொண்டு உங்கள் உடலை தளர்வாக வைத்துக் கொள்ள பழகுங்கள். மூச்சுப்பயிற்சியும் செய்யலாம். முழுமையாக அந்த அரைமணி நேரமும் உட்கார்ந்து படித்துக்கொண்டு மட்டுமே இருந்திருந்தால் எழுந்து சிறு நடைபயிற்சி செய்து உங்கள் உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • நடந்து கொண்டு படியுங்கள்.
  • ஒவ்வொரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்று வழிமுறையில் பாடத்தை படியுங்கள். (உதாரணமாக சிறிது நேரம் உரக்கப் படிப்பது, தொடர்ந்து அதை எழுதிப்பார்ப்பது, பிறகு அந்த பாடம் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் வரைபடங்களை வரைந்து பார்ப்பது, அதன் பிறகு அந்த பாடப்பகுதியை பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடுதல் போன்ற உத்திகளை கையாளலாம்.
  • நீங்கள் படிப்பதை ஒலிநாடாக்களில் பதிவு செய்து அதை பின்னர் மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்ளலாம்.
  • நீங்கள் படித்தது சம்பந்தமான படங்கள், வரைபடங்கள் மற்றும் இதர விஷயங்களை கற்பனை சித்திரங்களாகவோ அல்லது அது சம்பந்தமான நகைச்சுவையான விஷயங்களை நினைத்து பார்த்துக் கொள்ளலாம்.
  • அதிக கவனம் தேவையில்லாத செயல்களில்  ஈடுபடும்போது (உதாரணம் உடற்பயிற்சி)  படித்தவற்றை நினைவுகூர்ந்து பார்க்கலாம். இந்த செயல்களையும், படிப்பதையும் மாறி மாறி செய்யுங்கள்.

No comments:

Post a Comment